பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - நெய்தல்


தலைவன் கேட்கும் வண்ணம் தோழி தலைவியிடம் உரைத்தாள்.

190. இனிமையுடையதாய் இருந்தது அன்று முற்றா மஞ்சட் பசும் புறம் கடுப்பச் சுற்றிய பிணர சூழ் கழி இறவின் கணம் கொள் குப்பை உணங்கு திறன் நோக்கிப், புன்னை அம் கொழு நிழல் முன் உய்த்துப் பரப்பும் துறை நணி இருந்த பாக்கமும் உறை நனி இனிதுமன் அளிதோ தான்ே-துணி தீர்ந்து, அகன்ற அல்குல் ஐது.அமை நுசுப்பின், மீன் எறி பரதவர் மட மகள் மான் அமர் நோக்கம் காணா ஊங்கே.

- வெள்ளியந்தின்னனார் நற் 101 "முற்றாத மஞ்சட் கிழங்கின் பசிய புறத்தைப் போலச் சுற்றிய, சுரகரப்பான, சூழ்ந்த கழியிடத்துள்ள இறால் மீனில் கூட்டமான குவியலை உணக்கும் வகையை நோக்கிப் புன்னை மரத்தின் கொழுவிய நிழலின் முன்பு மீனைப் போட்டுப் பரப்பும் துறையே அன்றி அதன் அருகில் இருந்த பாக்கமும் மிக இனிமையுடையதாய் இருந்தது. அது கழிந்தது. அகன்ற அல்குலையும் மெல்லியதாய் அமைந்த இடையை யுமுடைய மீன் வேட்டையாடும் பரதவர் மட மகளின் மான் போன்ற அமர்ந்த நோக்கத்தைக் காணாத முன்பு வருத்த மின்றி யிருந்தேன் இப்போது துன்பமாய் உள்ளது” என்று தலைவன் தோழி கேட்க உரைத்தான்்

191. அறிவாயன்றோ அவள் நிலைமையை? அறிதலும் அறிதியோ-பாக பெருங்கடல் எறிதிரை கொழிஇய எக்கர் வெறிகொள, ஆடு வரி அலவன் ஒடுவயின் ஆற்றாது, அசைஇ, உள் ஒழிந்த வசை தீர் குறுமகட்கு உயவினென் சென்று, யான், உள் நோய் உரைப்ப, மறுமொழிபெயர்த்தல் ஆற்றாள், நறுமலர் ஞாழல் அம்சினைத் தாழ்இணர் கொழுதி,