பக்கம்:ஆங்கிலக் கவிதை மலர்கள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

xi

ஷேக்ஸ்பீயர் (1อั64 – 1616)

ஆங்கில நாட்டில் பிறந்து உலக மகா கவி என்னும் புகழ் பெற்றவர். அற்புதமான நாடகங்களும் கவிகளும் அருளியவர். மற்ற 'எல்லா நூல்களும் அழிந்தாலும் அவருடைய நூல்களைக் கொண்டு ஆங்கில மொழி அழியாது நிலவும் என்று அறிஞர் போற்றும் பெருமையுடையவர். 'ஸானட்' என்னும் வகையைச் சேர்ந்த அழகு அதும்பும் கவிகளில் ஒன்று 'கவியும் காலமும்' என்பது.

டெனிஸன் (1809 - 1892)

ஆங்கில மகா கவிகள் ஷேக்ஸ்பீயர், மில்டன், வோர்ட்ஸ் வொர்த் இவர்களோடு எண்ணப்படுபவர். கவிதைக்காகவே உயிர்வாழ்ந்தவர். இங்கிலாந்து மன்னரின் சமஸ்தான கவிஞராயும், சென்ற நூற்றாண்டின் ஆங்கிலக் கவிச்சக்கரவர்த்தியாயும் இருந்தார்.

தாம்ஸன் (1884 - 1882)

ஸ்காட்லாந்து தேசத்துக் கவிஞர். அழகான பல கீதங்கள் எழுதியிருக்கிறார். முழுப் பெயர் ஜேம்ஸ் தாம்ஸன்.

நாராயண வாமன திலகர்

இந்தியர்; மகாராஷ்டிர தேசத்தினர்; கிறிஸ்தவர் ; பல அழகான ஆங்கிலக் கவிகள் செய்துள்ளார்.

பரிபால்ட் (1743 - 1825)

இவ்வம்மையார் புகழ்பெற்ற ஒர் ஆங்கிலக் கவிஞர்.

பிரடரிக் லாக்கர் (1821 - 1895)

ஒர் ஆங்கிலக் கவிஞர்.

பிரெளணிங் தேவி (1806 - 1861)

ஆங்கிலக் கவிஞர். சிறு பிராயம் முதல் நோயாளி. அவர் செய்த அநேக அழகான கவிகளில் ஒன்றைப் பார்த்ததும் பிரெளணிங் என்னும் கவிஞர்க்குக் காதல்