பக்கம்:ஆங்கிலக் கவிதை மலர்கள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



xii

பிறந்து மணம் நிகழ்ந்தது. 'குழந்தைகளின் அழுகை' என்னும் பாடல், ஷாப்ட்ஸ்பரி பிரபு குழந்தைகளின் கஷ்டங்களை நீக்கும் பொருட்டுச் செய்த முயற்சிக்குப் பெருந்துணையாய் இருந்தது. ஆங்கிலப் பெண் கவிஞரில் இவ்வம்மையார் தலைசிறந்தவர்.

பைரன் பிரபு (1788 - 1824)

ஆங்கில மகா கவிகளில் ஒருவர். சிறு வயதிலேயே பாடல்கள் பாடியவர். 24-வது வயதில் பெருங் கவிஞர் என்று புகழ் பெற்றார். தவறான நடையால் ஜனங்களின் அன்பை இழந்து ஐரோப்பா சென்று வாழ்ந்து வந்தார். அப்படிப் போகும் பொழுது தாமஸ் மூர் என்னும் தம் நண்பருக்கு அனுப்பியதே 'என் தோணி கரையிலே' என்னும் கீதம். கிரீஸ் தேசத்தின் சுதந்திரத்துக்காகக் துருக்கியோடு கிகழ்ந்த போரில் கலந்து கொண்டு, 36-வது வயதில் வீர சொர்க்கம் அடைந்தார்.

போர்டில்லன் (1852 - 1921)

ஒர் ஆங்கிலக் கவிஞர்.

மதயாஸ் பார்

ஜெர்மானியர். ஸ்காட்லந்தில் பிறந்தவர். ஆங்கிலக்தில் குழந்தைகளுக்காக அநேக அழகான பாடல்கள் பாடியவர்.

மிக்கிள் (1785 - 1788)

ஸ்காட்லந்து தேசத்துக் கவிஞர். உலக மகா கவிகளில் ஒருவரான போர்த்துகீஸிய கவியரசர் காமியன்ஸ் என்பவர் எழுதிய 'லூஸியட்' என்னும் காவியத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். ஸ்காட்லந்து தேசத்துக் கவிஞர்களில் தலைசிறந்த பர்ன்ஸ் என்பவர், 'மிக்கிள் செய்த 'மாலுமியின் மனைவி' என்னும் பாடல் எல்லாப் பாஷைகளிலும் இணையற்ற பாடல்கள் என்பவற்றுள் ஒன்று' என்று புகழ்ந்துள்ளார்.