பக்கம்:ஆங்கிலக் கவிதை மலர்கள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



IV

என் கால்-பந்து இப்பொழுது அலமாரியில்

இப்பொழுது நானேதான் பந்து ;

உலகம் இங்கு மங்கும் உதைக்கும் !

அம்பு எய்வேனோ ? அதையும் மறந்தேன்.

என் அம்பையும் வில்லையும் எல்லாம்,

துக்கம் என் மீதே திருப்பிவிடும் !

v

வானத்தில் அன்று கண்ட நீலமும்

சாந்தியும்; இன்று உண்டோ ?

விளையாடும் பூமியில் வளர்ந்த மரம் -

அதைப் போர்த்த இலைகள் -

அந்தப் பசுமை இப்பொழுது உண்டோ ?

நான் நேசித்தவை எல்லாம் மாறிவிட்டன

அப்படியில்லை, மாறுதல் என்னிடம்தான்:

இனி என் மனம் சாந்தி அடையுமோ ?