இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
இன்றும் அன்றும்
I
ஐயோ! நான் சிறுவனாய் இருந்த பொழுது
இரவும் பகலும் ஆனந்தம் நிறைந்திருந்தது.
என் தோழர் மகிழ்ந்து அன்பு செய்தனர்.
அந்தக் காலத்தைத் திரும்பிப் பார்த்தால்,
பெருமூச்சு எழுவதும், கண்ணிர் கசிவதும்
வியப்பில்லை.
II
இரும்பு வளையம் சுற்றுவேன்:
இன்பத்துக்கு மேல் இன்பம் தரும் !
பம்பரம் - எத்துணை இன்பப் பொருள் !
ஆனால் , இன்று அந்த இன்பங்கள் எங்கே ?
ஐயோ, இப்பொழுது என் தலையே பம்பரம் -
என் கவலைகளே அதன் கயிறு !
III
என் இன்பங்கள் சிறகை இழந்தன.
நான் பறக்க இயலுமோ ? - விழுவேன் !
அச்சம் ஓங்கும், கனவு கலையும்.
முன்னால், இன்பம் அழைக்குமுன் வருமே !
இன்று அழைத்தால் இரும்பு வளையம்
ஏன் என்று கேட்குமோ ?
15