பக்கம்:ஆங்கிலக் கவிதை மலர்கள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

லாங்பெலோ

கவிஞனும் கவிகளும்

வசந்த ருதுவில் பட்சிகள் வரும்,
மாலையில் விண்ணிலே மீன்கள் மிளிரும்,
எங்கிருந்தோ - அறியோம் - அதுபோல் -
மேகத்தினின்று மழை-பூமியினின்று ஓடை,
அமைதியிடையே திடீரென்று ஒரு சப்தம்,
எவ்விதம் - அறியோம் - அதுபோல் -
திராட்சைக் கொடிக்குத் திராட்சை,
மரத்திற்குக் கனி,
தேவதாருவுக்குத் தென்றல்,
கடலில் பெருக்கம், சுருக்கம்,
எப்படி - அறியோம் - அதுபோல் -
கப்பல் கரை சேரும்,
இதழில் நகை தவழும்,
அலைகள் நுரை கக்கும்,
எவ்விதம் - அறியோம் - அதுபோல் -

35