பக்கம்:ஆங்கிலக் கவிதை மலர்கள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



என்று, சகோதரரே! குழந்தைகளுக்கு உரைப்பீரோ?

அவர்கள் கூறுவதைக் கேட்பீர் --
இரும்புச் சக்கரங்களின் இரைச்சலில்
எங்கள் விண்ணப்பம் இறைவன் செவியில் ஏறுமோ?
நாங்கள் அழுது புலம்புவோம், ஆனால்
பக்கத்தில் போவோர் செவியில் படுவதில்லையே!
பட்டாலும் அவர் ஒரு மொழிகூடப் பகர்வதில்லையே!
சக்கரங்களின் சத்தத்தில் நாங்கள் கூடப்
பிறர் பேச்சைக் கேட்க முடிவதில்லையே!
இறைவன் பக்கம் தேவர்கள் பாடிநிற்பரே!
எங்கள் அழுகுரல் அவன் செவியில் சேருமோ?

VIII


’ஆனால் ஐயோ! அதுவன்று விஷயம்.
அவன் கல்லைப் போல் வாய்திறவானே -
எங்களுக்கு வேலையிடும் எங்கள் எஜமானன்.
இறைவன் அம்சம் என்று இயம்புகின் றீரே,
இதென்ன பேச்சு, இதை யார் நம்புவார்?
மேலே பார்த்தால் மேகங்கள் தாமே
இருண்டு சக்கரம்போல் சுழலும்-வேறுண்டோ?
எங்களை ஏனே ஏளனம் செய்கிறீர்?
நாங்கள் துக்கத்தால் நம்பிக்கை இழந்தோம்
இறைவன் எங்கே? கண்ணீர் மறைக்கின்றதே

62