பக்கம்:ஆங்கிலக் கவிதை மலர்கள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

v

பாடித் திரிந்தனர் - பாடுவதை அறியார்!

அக்கிரமங்கள், அடக்கு முறைகள்,

அவைகளில் பிறந்த அந்தப் பழம் பல்லவியே

பாடித் திரிந்தனர்.

VI

சுயநலமியின் செல்வம், பசியின் கொடுமை,

ஏழையின் தேவையில் பிறந்த இழிசெயல்-

இவற்றை யெல்லாம் அந்தச் சிறுமிகள்

பாடித் திரிங்தனர்.

VΤΙ

ஆன்மாவை விலைகொள்ளும் லஞ்சம்,

மறச்செயல், துக்கம், அவற்றால்

விதைத்த வினையை அறுவடை செய்தலைப்

பாடித் திரிந்தனர்.

VIII

இவ்விதமே மறம் மல்கிய இடங்களில்

பாடித் திரிங்தனர்.

வீழ்ந்தார் இடையில் அவரையும் இழந்தேன் -

பாடித் திரிந்தனர்.

IX

தேவ கீதம் - காதல் கீதம் - தலைகீழாய் ஓதிய பிரார்த்தனே - பயங்கரப் பில்லி சூனியம் -

புனித இனிய விடுதலை - பாடித் திரிந்தனர்!

லூயி மாரிஸ்

65

V