பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தீபம் பார்த்தசாரதிகள் தெளிவடையட்டும்!

டந்த 15-1-1980-ஆம் நாளைய ‘துக்ளக்’ இதழில், ‘தேசிய மொழிகளும் தமிழ்நாடும்’ என்னும் தலைப்பில், தீபம் நா. பார்த்தசாரதி ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதில் எவ்வகைக் கரணியமும் இல்லாமலேயே தமிழ்நாட்டு அறிஞர்கள் மேல் ஒரு குற்றச்சாட்டைக் கூறியுள்ளார். தமிழறிஞர்களுக்குச் சமசுக்கிருதத்தின் மேல் அளவு கடந்த வெறுப்பு இருக்கின்றதென்றும், எவ்வளவுக்கெவ்வளவு அவ் வெறுப்பு மிகுந்திருக்கின்றதோ, அவ்வளவுக்கெவ்வளவு அவர்கள் அறிஞர்கள் என்று பாராட்டப் பெறுகிறார்கள் என்றும் அவர் அதில் குறைபட்டுக் கொள்கிறார். இக்குற்றச்சாட்டுடன் அவர் சமசுக்கிருத மொழியின் அருமை பெருமைகளை அக்கட்டுரையில் அளவிறந்து கூறி, அம்மொழியைத் தமிழர்கள் வெறுக்கக் கூடாது; தமிழோடு ஒப்பவைத்துப் பாராட்டிக் கொள்ளுதல் வேண்டும் என்று பொருள்படும்படி கூறியுள்ளார். அவர் வேண்டுகோள், ஒருவேளை தமிழ் வரலாறு தெரியாதவர்களுக்கும் ஆரியப் பார்ப்பனர்களின் மொழி இன வரலாற்று அழிம்புகள் விளங்காதவர்களுக்கும் சரியானது அல்லது நயன்மையுடையது போல் படலாம். ஆனால், கடந்தகால பிராமணிய மொழி, இனத் தாக்குதல்களை நன்கு உணர்ந்தவர்கள் பார்த்தசாரதியின் உரைகளை ஆரியப் பசப்பு மொழிகளில் ஒன்றாகவே கருதுவர்.

பொதுவாக, ஆரியப் பார்ப்பனர்கள் அஃதாவது பிராமணர்கள் தமிழ்மொழியை என்றுமே பாராட்டியதில்லை; பேணிக்