பாவலரேறு பெருஞ்சித்திரனார்
173
உலகுடையான் | ஜகதீச்வரன் |
சொக்கன் | சுந்தரன் |
தாயுமானவன் | மாத்ருபூதம் |
கருமாரி | கிருஷ்ணமாரி |
ஆடலரசன் | நடராஜன் |
செம்மலையான் | அருணாசலம் |
பிறைசூடி | சந்திரசேகரன் |
மாலிடங் கொண்டான் | சங்கர நாராயணன் |
முருகன் | சுப்பிரமணியன் |
பிள்ளையார் | கணபதி |
- இவ்வாறு தூய தமிழைக் கெடுத்து இழிவு தோன்றுமாறும் அதை விளங்கிக் கொள்ளாதவாறும் செய்த ஆரியப் பார்ப்பனர்கள் மொழி வெறியர்களா, இத்தீமையை ஏற்றுக்கொள்வதனால் எதிர்வரும் தாழ்ச்சிகளையும் அழிவுகளையும் அழியாத கள்ளங் கவடற்றவர்களானவர்களும், அன்பினாலும் விருந்தோம்பலினாலும் பகைவர்களையும் அரவணைத்து ஆதரித்துப் போற்றி, இன்று அவலத்திற் காட்பட்டுக் கிடப்பவர்களும் ஆன தமிழர்கள் மொழி வெறியர்களா? இதற்குப் பார்த்தசாரதியார் ‘துக்ளக்’கிலேயே விடை தருவாரா? அல்லது தென்மொழிக்கே எழுதித் தம் பெருந்தன்மையை உணர்த்துவாரா?
இன்னொன்றை இவ்விடத்தில் சுட்டிக் காட்டுதல் நன்று. மக்களினத்தில் மட்டும் ஆரியப் பார்ப்பனர்கள் சாதி யிழிவுகளைப் புகுத்தவில்லை. தமிழ் எழுத்துகளிலும் சாதிப் பாகுபாட்டைப் புகுத்தி யிருப்பதைப் - பார்த்தசாரதியார் அறிந்திருப்பார். ஏனெனில் அவர் தமிழாசிரியராக இருந்தவர். பாட்டியலில் உள்ள எழுத்துச் சாதிப் பாகுபாடுகள் இவை:
- உயிரெழுத்துகளும், முதல் ஆறு மெய்யெழுத்துகளும் -பார்ப்பன எழுத்துகள்
- இரண்டாவது ஆறு மெய்யெழுத்துகள் - சத்திரிய
- ல், வ், ழ், ள் - வைசிய எழுத்துகள்
- ற், ன் - சூத்திர எழுத்துகள்
- இன்னும் அதில் குறிப்பிட்டுள்ள பாட்டு நிலைகள் வருமாறு:
- பார்ப்பனர்க்கு - வெண்பா
- சத்திரியர்க்கு - ஆசிரியப்பா
- வைசியர்க்கு - கலிப்பா
- சூத்திரர்க்கு - வஞ்சிப்பா
கலம்பகத்தில், தேவர்க்கு 100 செய்யுள். பிராமணர்க்கு 95, அரசர், அமைச்சர்க்கு 70, வணிகர்க்கு 50 செய்யுள், சூத்திரர்க்கு 30 செய்யுள் பாட வேண்டும் என்பது பாட்டியல்,