பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

174

ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்


இப்படி எழுத்து, சொல், பாட்டு, மக்கள், ஊர், பேர், கடவுள் எல்லாமும் பார்ப்பனர்க்கு அடிமையாக இருந்தால் பார்த்தசாரதியார் மெச்சி, உச்சி குளிர்வாரோ? நல்லவேளை அவர் உச்சிக்குடுமி எதுவும் வைத்திருக்கவில்லை, பரட்டைத்தலை யராக இருக்கிறார்). இல்லாவிட்டால், அல்லது தட்டிக் கேட்டால், அல்லது ஆரியப் பார்ப்பனர்க்குத் தமிழர் அடிமைகள் ஆக முடியாது என்றால், அல்லது சமசுக்கிருதத்திற்குத் தமிழ்மொழி தாழ்ந்ததன்று உயர்ந்ததே என்றால் உடனே ‘லோகம் கெட்டுப் போயிடுத்து’ என்று கூத்தாடும் சவண்டிப் பார்ப்பனர் போல, பார்த்தசாரதியாரும் தமிழ்நாட்டு அறிஞர்களுக்குச் சமசுக்கிருதத்தின் மேல் காரணமற்ற வெறுப்பு, துவேஷம் என்று ‘துக்ளக்’கில் இல்லையென்றால் தினமணிக் கதிரில் எழுதோ எழுதென்று எழுதுவார். இல்லையா, தீபம் பார்த்தசாரதி அவர்களே!

இன்னொன்றைப் பார்த்தசாரதியார் தம் கட்டுரையில் கூறியிருக்கிறார். அதுதான் சமசுக்கிருதம் கழகக் காலத்திலும் அதையடுத்த காலங்களிலும் ஒர் அறிவுத் தொடர்பை(intellectual Companianship), தொடர்ந்து அளித்து வந்திருக்கிறதாம். நல்ல வேடிக்கை இது. தமிழ்மொழியில் இருந்த நூற்றுக்கணக்கான அறிவு நூல்களைச் சமசுக்கிருதத்தில் பெயர்த்து எழுதிக் கொண்டு, தமிழ் மூலங்களை அழித்து விடுதல் பார்ப்பனர்கள் அன்றிலிருந்து இன்றுவரைத் தொடர்ந்து செய்து வரும் ஒர் அப்பட்டமான அழிம்பு வேலை. இதுபற்றித் தென்மொழியில் முன்பே பல செய்திகளையும் குறித்திருக்கிறோம். இப்பொழுது தஞ்சை சரசுவதி மகாலில் தொடர்ந்து இவ்வேலை நடந்து வருவதையும் சுட்டியிருக்கிறோம். வேதத் தொடரின் இறுதியில் சேர்க்கப் பெற்றிருக்கும் உபநிடதங்கள் யாவும் தமிழ் முனிவர்கள் எழுதியவை என்பதை மறைமலையடிகள் உறுதிப்படுத்தியுள்ளார். தமிழ்நாட்டின் அறிவுத் தொடர்புக்கு மட்டுமன்று. உலகத்தின் அறிவுத் தொடர்புக்கே தமிழ்தான் மூலமாக இருந்து உதவும் என்பதைக் கீழ்வரும் பர். கில்பர்ட் சிலேட்டர் (Dr. Gilbert Slater) அவர்களின் கருத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கவும்.

Since Dravida is as once the part of India where the most ancient culture still survives and the part which is closest in touch with the twentieth century. In the flow of intellectual commerce between the east and the west the English speaking studentss of Tamil will supply many of the most achieve intermediaries.

இனி, அறிஞர்களின் அறிவுப் பரிமாற்றத்திற்கு மட்டுமன்று, இந்திய மக்களினத்தின் ஒருமைப்பாட்டுக்கே தமிழ்தான் இணைப்பு