பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

69


காறியுமிழ்ந்தால் உதடுகளையும், அவன்மேல் சிறுநீர் படும்படி செய்தால் ‘சூத்திரனின்’ ஆண் குறியினையும் அறுத்தெறிய வேண்டுமென்றும், பிராமணனுடைய குடுமி, தாடி, மீசை இவற்றைத் தொட்டாலும் பிடித்து இழுத்தாலும் சூத்திரனுடைய கைகளையே துண்டிக்க வேண்டுமென்றும், பிராமணனுடைய பொருள்களைத் திருடியவன் தானே தன் தோளின்மேல் உலக்கை, கருங்காலித்தடி, அல்லது இருமுனையும் கூரான கத்தி இரும்புத்தடி இவற்றில் யாதேனு மொன்றைத் துரக்கிக்கொண்டு போய் முறையிட வேண்டுமென்றும், உடனே அரசன் அவனை உயிர்போகத் தண்டிக்க வேண்டிய தென்றும், அதனால் உயிர் போய்விடுமானால் ‘சூத்திரனின்’ கரிசே (பாவமே) போய்விடுமென்றும், அவ்வாறு தண்டியாமல் விட்டால் அரசனுக்கே அக் கரிசு போய்ச் சேருமென்றும், பிராமணனுடைய மாட்டினைத் திருடிக்கொண்டு போனவனின் முழங்காலை வெட்டி யெறிய வேண்டுமென்றும், பிராமணன் வைத்து வளர்க்கும் செடியிலுள்ள பூவைத் திருடிக்கொண்டு போனாலும் அவனை 5 குன்றிமணியளவுள்ள பொன்னைத் தண்டமாகக் கட்டச் செய்ய வேண்டுமென்றும், பிற குலத்துப் பெண்களைச் சேர்வதால் உலகில் எல்லாச் சாதிகளும் கலந்து விடுமாகையால் உலகில் அறங்கள் குன்றி மழை பெய்யாமல் போகுமென்றும், ஆகவே ஒரு குலத்தில் உள்ள ஆடவர் பெண்டிர் பிற குலங்களிலுள்ள ஆடவர் பெண்டிர்களுடன் தொடர்பு வைத்துக்கொள்ளக் கூடாதென்றும் சூத்திரன் பணத்தை எக்காரணங் கொண்டும் தன் தேவைக்கு மிகுதியாகச் சேர்க்கக் கூடாதென்றும், அவ்வாறு சேர்த்தால், தான் அடிமையாக இருந்து உழைக்க வேண்டிய தலைவனாகிய பிராமணனையே துன்புறுத்த நேரிடலாம் என்றும், பிராமணன் தலையிலுள்ள குடுமியை மொட்டை யடிப்பதே அவனுக்கு உயிர்த் தண்டனையாகுமென்றும், ஆனால் பிறரை அவ்வாறு செய்ய நேருங்கால் உயிரை வாங்குவதே முறையாகு மென்றும், நாட்டிலுள்ள எல்லாக் கடின வேலைகளுக்கும் நான்காம் இனத்தாரான சூத்திரரையே அரசன் அமர்த்திக் கொள்ள வேண்டுமென்றும், அவ்வாறு அவர் எந்த வேலை செய்தாலும் அந்த வேலையினால் வரும் வருமானம் முழுவதும் அவருடைய தலைவர்களுக்கே சொந்தமாகுமென்றும், உழைப்பவர்களுக்குத் தம் தலைவர்கள் கொடுக்கின்ற பொருள்களல்லால் பிறிதோர் உடைமை இல்லை யென்றும், பிராமணன் இந்த உழைப்பாளர்களிடமிருந்து எல்லா வகைப் பொருள்களையும் இலவசமாகவோ வலுக்கட்டாயமாகவோ பெற்றுக் கொள்ளலாம் என்றும், நான்காம் இனத்தவராகிய