42
இரவீந்தரநாத தாகுர் - எண்ணக் களஞ்சியம்
ஒரு மூலையில் அமர்ந்து, சிந்தனை செய்து, நீங்கள் எல்லோரும்தான் எனது உலகம் என்று பாடல்கள் புனை வது எத்தனை நலமான நுகர்வு.
****
தெற்கு வாயில் திறந்தே உள்ளது. என் இன்னிள வேனிலே அதன் வழி உள்ளே நுழைந்திடு.
மழலைபேசும் இலைகளாக, தங்களை ஈத்துவக்கும் கொள்ளும் மலர்களாக உள்ளே வந்திடு.
****
நல்லது செய்ய விரும்புகிறவன் வாயில் கதவைக் தட்டுகிறான். அன்பு செலுத்துகிறவனுக்கு வாயில் கதவு திறந்தே இருக்கிறது.
என் தலைவனுடைய குழலோசை பொருள்கள்யாவற்றிலும் எங்கும் ஒலிக்கிறது.
****
வெளியிடப்படும் போது கூடக் காதல் ஒரு கமுக்க மாகவே இருந்து வருகிறது. ஏனெனில், காதலனுக்கு மட்டுமே தான், தான் காதலிக்கப்படுவது தெரியும்.
****
இருக்கிறாய் ஓ, கனியே, என்னிடமிருந்து எவ்வளவு தொலைவில் நீ?'
நான் 'ஓ, மலரே, உன் நெஞ்சத்தில் மறைந்திருக்கிறேன்.
****
}