பக்கம்:உப்புமண்டித் தெரு-புதுக்கவிதைச் சிறுகதைகள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

55————————||||

உப்புமண்டித் தெரு

வெறும் அறிவுக் குப்பைகளை மட்டும்
மூளையில் திணித்து கொண்டிருந்த
'விதண்டா வாதிகள்' சிலர்
ஒரு நாள் -
அவரிடம் வந்தார்கள்!
அந்த விதண்டா வாதிகளின்
அடி ஒற்றிகளும்
'ஆமாம், ஐயா!' லோட்டாக்களும்
அவர்களோடு
அவர் வீட்டுக்கு வந்தார்கள்!


அவர்களின் பின்னால்
வீதிச் சோம்பேறிகளும்
வேடிக்கை பஷணிகளும்
அவர் வீட்டில்
கூடத்தொடங்கினர்!
அவர் -
அவர்கள் அனைவரையும்
அன்பு ததும்பும்
புன்னகையோடு
வரவேற்றார்!
விழிகளின் வியப்பையே
'ஏன்?' ஆக்கினார்!


விதண்டா வாதிகளின்
தலைவர் பெருமான்
விஷமச் சிரிப்போடு
பத்திரிக்கை ஒன்று