பக்கம்:உப்புமண்டித் தெரு-புதுக்கவிதைச் சிறுகதைகள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

73 ————————||||

உப்புமண்டித் தெரு

அவரது நெடிய உடலையே

தகர்த்தது!

தணலழகனும்

பின்னால் திரும்பிப் பார்த்து

'இரணிய தாசா!

வா, எண்னோடு' என்று

ஒரு தோழரை

இழுத்துக் கொண்டு ஓடினார்!


இரணியதாசன்

தணலழகனின்

முடைசடை சந்தர்ப்பங்களின்

அந்தரங்க உதவியாளன்!


ஆக-

ஆறு பேர்கள் மட்டும் அல்ல -

எப்படியோ

எட்டு பேர்கள்

பரம நம்பியினர்

அடுப்பங்கரைக்குள்

புகுந்து விட்டனர்!

அவர்களில் ஒருவர்

உள்ளே நுழைந்ததும்

முதல் காரியமாக

அடுப்பங்கரைக்

கதவுகளைச் சாத்தி

கெட்டியாக

உள் தாழ்ப்பாளையும்

போட்டு விட்டார்!