பக்கம்:உப்புமண்டித் தெரு-புதுக்கவிதைச் சிறுகதைகள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

75 ————————||||

உப்புமண்டித் தெரு

புதுப்பிறவிகளே!

புண்ணியச் செல்வங்களே!”

போய் வாருங்கள்!

- என்று ஆனந்தக் கண்ணீர்.

அருவியாகக்

கரங்குவித்தார்!


அந்த எட்டுப் பேர்களில்

குறிப்பாக -

விதண்டாவாதத் தலைவருக்குப்

பரம நம்பியின்

இன்னுரையோ

பொன்னுரையோ

புரியவில்லை!


ஜன்னிக் கவிஞனுக்கு

இதயத்திலோ-

மூளைக்குள்ளோ-

ஏதோ ஒன்று

நெருடிற்று

அதனால்

உக்கிரமாகப் பிரிந்த

அவனது

உதடுகள் ஊமையாகி விட்டன!


இளம் விஞ்ஞானிக்கும்

மூளை யோட்டத்தில்

ஒரு மின் அதிர்ச்சி!