பக்கம்:உலகம் பிறந்த கதை.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

116

அப்படித் தோன்றிய வாயுக் கோளங்கள் சூரியனைச் சுற்றி வலம் வரத் தொடங்கின. அவ்விதம் வலம் வந்த போது ஒன்றை ஒன்று இழுத்தன. அப்போது ஒன்றுடன் ஒன்று மோதின. அதனால் பெரிதாயின சில. தொலைவில் ஓடிப் போயின சில. இப்படி விலகி வந்ததுதான் நமது பூமி.

சுமார் இருநூறு கோடி ஆண்டுகள் முன்பு இவ்வாறு நிகழ்ந்தது. பூமியிலே உள்ள ஈயமும், கடலிலே உள்ள உப்பும் பூமியின் வயதை நமக்கு அறிவிக்கின்றன.

சூரிய வட்டத்திலிருந்து விலகி வந்த பூமி அனல் கக்கிக் கொண்டு இருந்தாள் பம்பரம் போல் சுழன்று கொண்டு இருந்தாள். பல நூறு ஆண்டுகள் இப்படிச் சென்றன.

பூமியின் மேல் பகுதி சிறிது கெட்டி ஆயிற்று. ஆயினும் உள் பகுதி மட்டும் குழம்பாகவே இருந்தது.

அந்தக் காலத்திலே பூமி வெகு வேகமாகச் சுற்றியது. இன்று சுற்றுவதை விட நான்கு பங்கு வேகமாகச் சுற்றியது.

அவ்விதம் சுற்றிய போது பூமியின் உள் பகுதியான திரவத்திலே அலை எழும்பியது.