பக்கம்:உலகம் பிறந்த கதை.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

117

அது, வேகமாக மோதியது. அப்படி மோதியதால் பூமியின் ஓடு நொறுங்கியது. நொறுங்கிய ஓடு, தொலைவில் போய் விழுந்தது. அப்படி விழுந்ததே சந்திரன். சந்திரன் பியந்து போன இடம் பள்ளம் ஆயிற்று.

சந்திரன் தோன்றிய பிறகு மேலும் குளிர்ந்தது பூமி. வான மண்டலத்திலிருந்து மேகங்கள் மழை பொழிந்தன. இடை விடாது பொழிந்தன. கீழே விழுந்த மழை பல காலம் வரை ஆவியாகப் போய்க் கொண்டே இருந்தது.

பிறகு, பூமி ஓரளவு குளிரவே, ஆவியாவதும் குறைந்தது. பூமியிலே நீர் தேங்கியது. எங்கே பார்த்தாலும் ஒரே நீர் மயம். கடல்கள் தோன்றின, ஆறுகள் தோன்றின.

இப்படிப் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகள் சென்றன. மலைகள் தோன்றின. பூமியிலே தட்ப வெப்பங்களில் மாறுதல்கள் ஏற்பட்டன.

இன்னும் பல ஆயிரம் ஆண்டுகள் சென்றன. உயிர்கள் தோன்றுவதற்கான சூழ்நிலை உண்டாயிற்று.