பக்கம்:உலகம் பிறந்த கதை.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

பாம்புப் பிடாரன் வருவான், அவன் அருகில் போய் நிற்பேன். அவன் தனது மகுடியை எடுத்து ஊதுவான். பாம்பு படம் எடுத்து ஆடும். நான் கூர்ந்து கவனிப்பேன்.

எனக்கு ஒரே வியப்பு! இந்தப் பாம்பின் தலை மேலே இவ்வளவு பெரிய பூமி எப்படி இருக்க முடியும்?

ஒரு நாள். செவிட்டு வாத்தியார் கதை சொன்னார். பகீரதன் கதை. பாதாள உலகம் போய் சாம்பலான சகர புதல்வர் ஆயிரவருக்காக ஆகாச கங்கையைக் கொண்டு வந்த கதை.

அதைக் கேட்டதும் எனக்கு ஓர் ஆசை தோன்றியது. என்ன ஆசை! பாதாள உலகத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை.

பாதாள உலகத்தைப் பார்ப்பது எப்படி?

'பாதாள உலகம் பூமிக்கு அடியில் இருக்கிறது' என்று செவிட்டு வாத்தியார் சொன்னார்.

பூமியைத் தோண்டினால் பாதாள உலகம் தெரியும் அல்லவா!

எங்கள் வீட்டுக்கு அருகே கிணறு ஒன்று தோண்டினார்கள். அதை நான் கவனித்