பக்கம்:உலகம் பிறந்த கதை.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

13

‘ஏன் அப்பா! பூமிக்கு அடியிலே ஏழு உலகங்கள் இருக்காமே! செவிட்டு வாத்தியார் சொன்னார். அப்படியா அப்பா!'

'ஆமாம்.'

'அப்படி அந்த ஏழு உலகங்களும் ஒன்றின் மேல் ஒன்று இருந்தால் நசுங்கி விடாதோ!'

'நசுங்காது.'

‘ஏன் அப்பா! இந்த பூமி பாம்பின் தலை மேலே இருக்காமே!'

'ஆமாம்.'

'அப்படியானால் அந்தப் பாம்புக்குத் தலை வலிக்காதோ!'

'வலிக்காது. அந்தப் பாம்புக்கு ஆயிரம் தலை இருக்கு.'

தந்தையாரின் பதில் எனக்குத் திருப்தி அளிக்கவில்லை. ஒரு பாம்பின் தலை மேலே இவ்வளவு பெரிய பூமி எப்படி இருக்கமுடியும்? பாம்பின் தலை நசுங்கி விடாதா?

இதுதான் எனது கவலை.

எவரைக் கேட்டாலும் என்ன சொன்னார்? தந்தையார் கூறிய பதிலையே தான் கூறினார். எனது ஐயம் தீரவில்லை.