பக்கம்:உலகம் பிறந்த கதை.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

15

தேன். பாதாள உலகத்தைப் பார்த்துவிட உறுதி கொண்டேன்.

கிணறு தோண்டுபவர்கள் காலையில் வருவார்கள். கிணறு தோண்டுவார்கள். நானும் அங்கே சென்று நிற்பேன். எதற்காக? கிணறு தோண்டி முடிந்ததும் எட்டிப் பார்ப்பதற்காக. பூமி அடியில் பாதாள உலகம் இருந்தால் தெரியாதா?

பாதாள உலகத்தைப் பார்த்து விடுவது என்ற உறுதியோடு நின்றேன். நான் சிறுவன் எனவே, வேலைக்காரர்கள் என்னை விரட்டி விட்டார்கள். நான் கிணற்றில் விழுந்து விட்டால் என்ன செய்வது? என்ற அச்சம் அவர்களுக்கு. எனது ஆசையை அவர்கள் அறிவார்களா?

வேலைக்காரர் போன பிறகு எட்டிப் பார்க்கலாம் என்று எண்ணினேன்.

அவர்கள் போனார்கள். மெல்லமெல்லக் கிணறு அருகே சென்றேன்.

'டேய்! பயலே!' என்ற குரல் கேட்டேன். திரும்பிப் பார்த்தேன். எனது தந்தை. எனது எண்ணம் மண்ணாயிற்று. பாதாள உலகத்தைப் பார்க்காமலே திரும்பி விட்டேன்.