பக்கம்:உலகம் பிறந்த கதை.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

81

இவை எல்லாம் எப்படித் தோன்றின? எப்படி வளர்ந்தன? நமக்குத் தெரியாது. திட்டவட்டமாக எதுவும் சொல்ல இயலாது.

எனினும் குதிரை யானை ஒட்டகம் ஆகிய மூன்று பிராணிகள் பற்றிய முழு விபரம் கிடைத்துள்ளது.

குதிரையின் வம்சம் நேற்றுத் தோன்றியது அன்று. சுமார் நாலு கோடி வருஷங்கள் முன்பு தோன்றியது ஆகும்.

தோன்றிய காலத்திலே குதிரை இன்று போல் இருந்ததா? இல்லை. பின் எப்படி இருந்தது? நாய்போல் இருந்தது. நாய் அளவு உயரமே! நாய்க்கு இருப்பது போல காலில் விரல் இல்லை. மிக மெல்லிய கால்கள். வேகமாக ஓடுவதற்கு லாயக்கில்லாதவை. இந்தக் குதிரைக்கு ‘இயோஹிப்பஸ்' என்று பெயர். அதாவது 'உதய காலப் புரவி' எனலாம். இப்படி இருந்த குதிரைதான் சிறிது சிறிதாக மாறி, வளர்ந்து, வளர்ந்து பல தலைமுறைகள் சென்ற பின் இன்றைய நிலை அடைந்துள்ளது.

இந்த விபரம் முழுவதையும் நன்றாக ஆராய்ந்து பதிவு செய்திருக்கிறார்கள்.