இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
பருத்தி
வேளைக் கொருவிதம் உடையுடுத்து-மக்கள்
வீதியில் செல்வதும் என்னாலே ;
நாளும் நிகழும் நிகழ்ச்சிசொலும்-அந்த
நல்ல புதினமும் என்னாலே.
பாலர் படிப்பதும் என்னாலே-உயர்
சீலம் உணர்வதும் என்னாலே ;
வேலை உயர்வதும் என்னாலே-பொருள்
வேண்டிப் பெறுவதும் என்னாலே.
நாடு சிறப்பதும் என்னாலே-நல்ல
நாகரி கங்களும் என்னாலேே ;
ஆடலும் பாடலும் என்னாலே -என்னை
ஆதரிப் பீர்உயர் பொன்போலே.