பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

111


பம்மல் சம்பந்தனார் பாராட்டுரை

1922 அக்டோபர் 7-ஆம் நாள் மனோஹரன் நாடகம் பம்மல் சம்பந்த முதலியார் தலைமையில் சிறப்பாக அரங்கேறியது. மஞேஹரனில் முக்கிய கட்டமான சங்கிலி அறுக்கும் காட்சி முடிந்ததும் பாவலர் ஓடிவந்து, கீழே கிடந்த என்னைத் தூக்கி முத்தமிட்டுப் பாராட்டினார். தலைமை தாங்கிய பம்மல் சம்பந்த முதலியார் அவர்கள் கீழ்வருமாறு ஆக்கிலத்தில் பேசினார்.

“சீமாட்டிகளே, சீமான்களே! நான் எழுதிய நாடகங்கள் யாவற்றிலும் ‘மனேஹரா’ மிகவும் உயர்ந்தது என்பதை நீங்கள் அறிவீர்கள்.

இந் நாடகத்தைச் சென்ற இருபத்தைந்து ஆண்டுகளாக எங்கள் சுகுண விலாச சபையில் நானே மனோஹரனாக வேடம் பூண்டு நடித்துவருகிறேன். சிறந்த நடிகர்கள். பலர் மஞேஹரனாக வேடம் தரித்து நடிப்பதையும் நானே நேரில் பார்த்திருக்கிறேன். எனக்கோ வயதாகி விட்டது. முதுமைப் பருவத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறேன். வீர மனோகரனக நடிப்பதற்குரிய வலிமை குறைந்து வருகிறது. நான் நாடகத் துறையிலிருந்து ஒய்வு பெறும் காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.

இன்றிரவு மாஸ்டர் டி. கே. ஷண்முகம் மனோகரனாக நடித்ததைப் பார்த்ததும் என்மனதிற்குச் சாந்தியும் மகிழ்ச்சியும் ஏற்பட்டது. நான் வெகுநாட்களாக ஆவலோடு எதிர்ப்பார்த்திருத்த ஓர் உத்தமநடிகர் தோன்றிவிட்டார் என்பதை இந்த இளஞ்சிறுவருடைய நடிப்பு வெளிப் படுத்தியது. கடவுள் இச்சிறியவருக்கு நீண்ட ஆயுளையும் நாடகக் கலைத்துறையிலும் மேன்மலும் வளர்ச்சியையும் சிறப்பையும் தருவாராக.”

நாடகப் பேராசிரியர் பேசியதை யெல்லாம் பாவலர் தமிழில் மொழி பெயர்த்து எனக்குச்சொன்னார். முதலியார் அவர்கள்பேசி முடித்து உள்ளே வந்ததும்நான் அவரது பாதங்களில்பணிந்தேன். பேராசிரியர் என்னை மகிழ்வோடு கட்டிக்கொண்டு உச்சிமோந்து வாழ்த்தினார்.

போட்டாப் போட்டி

அப்போது ஒற்றைவாடைத்தியேட்டரில் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி நடந்து கொண்டிருந்தது. ஒரு நாள் பாவலர்