பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பெரியண்ணா திருமணம்

கல்லிடைக்குறிச்சியில் இருந்தபோது பெரியண்ணாவுக்குத் திருமண ஏற்பாடு நடைபெற்றது. நாடகம் முடிந்தபின் சாமான்களையெல்லாம் கொல்லத்திற்கு அனுப்பிவிட்டு எல்லோருமாக நாகர்கோயில் போய்ச் சேர்ந்தோம். கவிமணி தேசிக விநாயகனாரின் ஊராகிய புத்தேரியைச் சார்ந்த திருமதி பேச்சியம்மை அவர்களுக்கும் பெரியண்ணா டி. கே. சங்கரன் அவர்களுக்கும் 1929 நவம்பர் 21 இல் புத்தேரியில் திருமணம நடந்தேறியது. இதுவே எங்களுக்குத் தெரிந்து, குடும்பத்தில் நடந்த முதல் திருமணம், நாங்களெல்லாம் மகிழ்ச்சியில் திளைத்திருந்தோம். ஆனால், பெரியண்ணாவுக்கு மட்டும் , திருமணம் மகிழ்ச்சியை உண்டாக்கவில்லை.

திருமணத்திற்காக நாங்கள் எல்லோரும் நாகர்கோவில் ஒழுகினசேரியில் ஒரு இல்லத்தில் தங்கியிருந்தோம். திருமணம் முடிந்த இரண்டாம் நாள் இரவு, சிற்றப்பாவுக்கும், என். எஸ். கிருஷ்ணனுக்கும் சிறு தகராறு ஏற்பட்டது. சிற்றப்பா என். எஸ். சிருஷ்ணனை வாயில் வந்தபடி திட்டிவிட்டார். என். எஸ் கிருஷ்ணன் மிகவும் உணர்ச்சி வசப்பட்டு, திடீரென்று அன்றிரவே மதுரைக்குப் புறப்பட்டுப் போய், ஜெகன்னாதைய்யரின் பால மீன ரஞ்சனி சங்கீத சபையில் சேர்ந்துகொண்டார். விபரம் அறிந்த நாங்கள் வருந்தினோம். பெரியண்ணாவுக்கு ஏற்கனவே மண வாழ்வில் வெறுப்பு ஏற்பட்டிருந்த நிலையில் என். எஸ். கிருஷ்ணன் ஒடிப்போன செய்தி மேலும் வேதனையை வளர்த்தது.

கலைவாணரின் நல்லுணர்வு

நாங்கள் கொல்லம் நாடகம் முடிந்து, ஆலப்புழையில் நடித்துக் கொண்டிருந்தோம். ஜெகன்னாதய்யர் கம்பெனியி