பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

311


ராஜாவின் இன உணர்ச்சி

ஒரு நாள் மேனகாவில் டிப்டிக் கலெக்டர் பங்களாக் காட்சிக்கு ஸ்டுடியோவிலுள்ள மட்டரகமான சோபாக்களையும், நாற்காலிகளையும் போட்டுவிட்டு செட்டிங் மாஸ்டர் அலட்சியமாக இருந்து விட்டார். அப்பொழுது ராஜா ரஞ்சித் மூவிடோனிலேயே நடிகராகவும், டைரக்டராகவும் மாதச் சம்பளத்திற்கு இருந்தபடியால் இதுபற்றி சிரத்தை எடுத்துக் கொண்டு கேட்பாரென செட்டிங் மாஸ்டர் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. ராஜா படப்பிடிப்பின்போது வந்தார். செட் அமைந்திருந்ததைச் சுற்றிப் பார்த்தார். கண்களில் கோபக்கனல் வீசியது.

“யாரடா அவன் ஸெட்டிங் மாஸ்டர், ரஞ்சித் மூவிடோனில் நல்ல சோபாக்கள் கிடையாதா? ஏன் இந்த ஒட்டை உடைசல்களே யெல்லாம் எடுத்துப் போட்டிருக்கிறீர்கள்?”

என்று இந்தியில் கேட்டார். செட்டிங் மாஸ்டரும், ஸ்டோர் கீப்பரும் முனகிக் கொண்டே,

“மற்ற சோபாக்களெல்லாம் நமது இந்திப் படங்களுக்கு ஸ்பெஷலாக உபயோகிப்பது” ... என்று மேலும் ஏதோ சொல்ல முயன்றார்கள். உடனே ராஜா கடுங் கோபத்தோடு இடை மறித்து,

“ஏண்டா ஸ்டுடியோவுக்கு முள்ளங்கிப் பத்தைப்போல் ரூபாய் பதிமூவாயிரம் வாங்கவில்லையா! எங்கள் தமிழ் நாட்டான் காசு உங்க பாட்டன் வீட்டுச் சொத்தா?” என்றார். அதற்குள் ஸ்டோர் அறையின் சாவி வேறு யாரிடமோ இருப்பதாகச் சிப்பந்திகள் முணுமுணுத்தார்கள்.

“கொண்டாடா சுத்தியலேயும், கடப்பாறையையும்” என்று ஆவேசத்துடன் கூறிவிட்டு, சோபாக்கள் வைத்திருந்த ஸ்டோர் அறையின் பெரிய பூட்டை உடைப்பதற்குத் தயாரானார் ராஜா. உள்ளே இவ்வாறு கலவரம் நடந்துகொண்டிருந்தபோது வெளியிலிருந்து வந்த ஸ்டூடியோ முதலாளி திரு சந்துலால்ஷா நடந்த விஷயத்தை விசாரித்துத் தெரிந்து கொண்டு, ராஜா