பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/419

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

410


பக்கங்களிலிருந்தும் வந்து குவிந்தனார். இராமாயணம் இரவு 9 மணிக்கு ஆரம்பமாகும். ஆனால் ரசிகர்கள் மாலை 4 மணி முதலே இரட்டை மாட்டு வண்டிகளிலும், பஸ்களிலும், கார்களிலுமாகச் சாரி சாரியாக வரத் தொடங்கினார்கள். தியேட்டரின் பின்புறம் பெரிய தென்னத்தோப்பும், அதன் நடுவே கம்பெனி வீடும் இருந் தன. மாட்டு வண்டிகளையும்,கார்களையும், பஸ்களையும் தாண்டித் தான் நாங்கள் தியேட்டருக்குள் நுழைய வேண்டும். ஆண்களும் பெண்களுமாக ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கட்டுச்சோற்றை வைத்துக் கொண்டு சிறுசிறு கூட்டமாக உட்கார்ந்து சாப்பிடுவது காட்சிக்குப் பெரும் விருந்தாக இருந்தது. மற்ற நாடகங்களுக்கு வசூல் குறையும்போது மனோகராவும், இராமாயணமுந்தான் வசூலுக்கு நம்பிக்கை தரும் நாடகங்களாக அமைந்தன.