பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/420

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
வருங்காலத் தமிழர் தலைவர்


நாடகங்களைப்பற்றி மேலே தொடருமுன் பேரறினார் அண்ணா அவர்களோடு எனக்கேற்பட்ட பெருமைக்குரிய ஒரு தொடர்பினே இங்கு குறிப்பிட விரும்புகிறேன். ஆம், பாலக்காடு முகாமில் தான் இது நடந்தது. அறிஞர் அண்ணா அவர்களின் திராவிட நாடு இதழ் காஞ்சீபுரத்திலிருந்து தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. குமாஸ்தாவின் பெண் அல்லது கொலைகாரியின் குறிப்புகள் என்னும் பெயரில் அண்ணாவின் முதல் நவீனம் வாரந் தோறும் அதில் வெளியாயிற்று. அதனை நாங்கள் தொடர்ச்சி யாகப் படித்து வந்தோம். அடிக்கடி நான் அண்ணாவுக்குப் பாராட்டுக் கடிதங்களும் எழுதினேன். பாலக்காடு வந்த சமயம் அந்தத் தொடர் கதை முடிவு பெற்றிருந்தது. அதனை நூல் வடி வில் வெளியிட விழைந்தார் அண்ணா. கதை நாங்கள் நடித்த நாடகத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டதால் முறைப்படி அனுமதி பெற்றுக் கொள்ளுமாறு வேண்டினேன். அதன்படி அனுமதி கோரிக் கடிதம் எழுதிய அண்ணா, அத்தோடு நாவலுக்கு நானே ஒரு முன்னுரை எழுத வேண்டுமென்றும் கேட்டிருந்தார். இதனை எனக்குக் கிடைத்த பெரும் பேருகக் கருதினேன். 30. 1. 1943 இல் அண்ணாவின் முதல் நாவலுக்கு நான் எழுதிய முன்னுரை இது.

“தோழர் சி. என். அண்ணாதுரை அவர்கள் வருங்காலத் தமிழர் தலைவர். இன்று தமிழகத்தில் சிறந்த எழுத்தாளர்கள் என்று புகழப்படும் ஒரு சிலரில் தோழர் அண்ணாதுரை அவர்கள் முன்னணியில் நிற்பவர். இவரது ஆராய்ச்சி நிறைந்த ஆணித் தரமான சொற்பொழிவைக் கேட்க, கொள்கையில் வேறுபட்ட கூட்டத்தினரும் குழுமி நிற்பர். இவரது அழகிய உரைநடையை “கவிதை நடை” என்றே கூறலாம். இந்த நடைச் சித்திரத்தைக் நண்டு வியந்த தமிழறினார் பலர். இன்று தோழர் அண்ணாதுரை