பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/486

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

477


இருப்புத் தொகையையும் விளம்பரத் தொகையையும் வைத்துக் கொண்டு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தமிழ் மாகாண நாடகக்கலை அபிவிருத்தி மாநாடு என்னும் நூலை மிகச் சிறப்பாக வெளியிட்டார் சிவதாணு. காரைக்குடியில் பில்ஹணன் நாடகம் நடை பெற்றபோது மாநாட்டு நூலும், பில்ஹணன் நாடக நூலும் வெளியிடப் பெற்றன. பில்ஹணன் காரைக்குடியில் ஒரு மாத காலம் நடைபெற்றதால் நாடக அரங்கிலேயே முன்னுாற்றுக்கும் மேற்பட்ட நாடக நூல் விற்பனை ஆயிற்று.

அடுத்தபடியாக திருச்சிராப்பள்ளியில் நாடகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. 1-11-44 இல் மனோகராவை பட்டா பிஷேக நாடகமாக நடத்தி முடித்துக் கொண்டு திருச்சிக்குப் பயணமானோம்.