பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/499

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பாரதி மண்டபத்துக்கு ஒளவையார்

ஒருவார காலம் கலைவாணர் பாகவதர் ஆகியோரின் தீவாந்திர தண்டனையைப் பற்றிய பேச்சாகவே இருந்தது.நீண்ட கால உழைப்பினல் சோர்வுற்றிருந்த பெரியண்ணா டி.கே. சங்கரன் அவர்கள் கம்பெனித் தொல்லைகளிலிருந்து சிறிது ஓய்வு பெற எண்ணினார். சின்னன்ணா டி. கே. முத்துசாமி அவர்களிடம் நிர் வாகப் பொறுப்பினை ஒப்படைத்து விட்டு 16.5.45இல் அவர் நாகர்கோவில் சென்றார்.

கல்கி தலைமையில் ஒளவையார்

எட்டையபுரம் பாரதி மண்டப நிதிக்காக 19-5.45 இல் ஒளவையார் நாடகம் நடைப்பெற்றது. இந் நாடகத்திற்கு ‘கல்கிஆசிரியர் திரு. ரா. கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கி மிக அருமை யாகப் பேசினார். சென்னை, தஞ்சை, திருச்சி முதலிய நகரங்களி லுள்ள பத்திரிகை ஆசிரியர்கள் பலருக்கும் ஒளவையாரை வந்து பார்த்து வாழ்த்துமாறு அழைப்புகள் விடுத்திருந்தோம். பல அன்பர்கள் வந்து பார்த்தார்கள். பத்திரிகையில் விமர்சனங்கள் வரைந்தார்கள். அவர்களிலே குறிப்பிடத்தக்கவர்கள் திருவாளர்கள் நாரண துரைகண்ணன் (பிரசண்டவிகடன்) நவீனன் (நவ யுவன்) வல்லிக்கண்ணன் (கிராம ஊழியன்) ஏ. எஸ். ரங்கநாத சிரோமணி (ஹிந்துஸ்தான்) ராஜகோபாலன் (கலாமோகினி) ப. நீலகண்டன் (கலைவாணி) சீனிவாசராவ் (நாரதர்) சாவி (மாலதி) திருலோகசீதாராம் (சிவாஜி) மேற்குறிப்பிட்ட பத்திரி கைகள்தாம் திருச்சியில் எங்களுக்குக் கிடைத்தவை. இன்னும் பலர் எழுதியிருக்கலாம். ஆக, பத்திரிகையாளர்களின் இந்த விமர்சனங்களெல்லாம் சேர்ந்து ஒளவையாருக்கு 1942இல்மதுரை யில் கிடைக்காத வருவாயை 1945ல் திருச்சியில் கிடைக்கும்படி செய்தன என்பதை நன்றியோடு குறிப்பிட விரும்புகிறேன்.