பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/546

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அறவழி காட்டிய அண்ணலின் மறைவு

ஜனவரி 30ஆம் நாள். மக்கள் குலத்திற்குத் துக்க நாள் உலகமே அதிர்ச்சியடைந்தது. இதயம் படைத்தவர் எல்லோரும் அழுதனார். மாலை 6 மணிக்கு அகில இந்திய வானெலி மகாத்மா காந்தியடிகள் மறைந்தார் என்ற அவலச் செய்தியினைப் பலமுறை அலறியது. புதுதில்லியில் அன்று மாலை நான்கு மணி அளவில் ஒரு வெறிபிடித்த இந்துவால் காந்தி மகாத்மா சுடப்பட்டார் என்ற கல்லும் உருகும் செய்தியினைக் கேட்டுக் கலங்கினோம். உடனே நாடகத்தை நிறுத்திவிட்டு மேற்கொண்டு செய்திகளை அறியத் துடித்தோம். இரவு முழுதும் உறக்கமில்லை. மறுநாள் நடை பெற்ற மெளன ஊர்வலத்தில் கம்பெனி முழுதும் கலந்து கொண்டது.

பாரதி பாடல் உரிமை

பிப்ரவரி 2 ஆம் நாள் பாரதி பாடல் உரிமை சம்பந்தமாக ஏ. வி. எம். அவர்களின் நோட்டீஸ் வந்தது. அதுபற்றி எங்கள் வக்கீல் திரு தாண்டவன் செட்டியார் அவர்களைக்கலந்து ஆலோசித்தோம். பில்ஹணன் நாடகத்தில் “தூண்டிற் புழுவினப்போல்” என்னும் மகாகவி பாரதியின் பாடலை நாங்கள் நாட்டியப் பாட லாக அமைத்திருந்தோம். அப்பாடல் பில்ஹணன் படத்திலும் பதிவு செய்யப்பட்டது. பாரதியின் பாடல்களை இசைத் தட்டு களிலும் திரைப்படத்திலும் பதிவு செய்யும் உரிமை சட்டப்படி தம்மைச் சேர்ந்ததென்றும், ஆகவே, பில்ஹணன் படத்திலிருந்து அப்பாடலை நீக்கிவிட வேண்டுமென்றும், அப்பாடலுடன் பில்ஹணன் படம் திரையிடப்படுமானல் தாம் நஷ்டயீடு கோரி