பக்கம்:என் தந்தை தாயர்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



ஏமாந்த இரண்டு திருடர்கள்

[அங்கம்-1]

ஊடலே திருடணும் இண்ணு பிரயத்னப்பட்டு பார்க்கறேன் முடியலே-என் ஒருத்தனலே. நம்ப ரெண்டு பேருமா போய் அவன் கிட்ட ஏதாவது வேலைக்கி அமர்ந்து-சமயம் பார்த்து அவன் பெட்டியிலே வைச்சிருக்கிற ரூபாயல்லாம் தபாய்ச்சிகினு வந்தூடனும் அப்படி செய்தோம் இண்ணா - இந்த ஜன்மத்திலே நம்ப மறுபடியும்-திருடவேண்டியதில்லே

பலே. அப்படியே அண்ணா.

பக். சாப்பாட்டுக்கு மேலே அவன் ஊட்டுக்குப்போகலாம்.

காட்சி முடிகிறது.
_________________
இரண்டாம் காட்சி

இடம்--ஆனூரில் அப்பாசாமி முதலியார், வீட்டுக்த் தெருத்திணை


காலம்-காலை

பக்காத் திருடனும், பலே திருடனும், உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர்.

பலே. என்ன அண்ணா - மொதலியாரு என்னமோ பெட்டியிலே தூக்கிக்குனு உள்ளே போனாரே ?

பக்..என்னமோ தெரியலெ - அத்தெ ரகசியமா தெரிஞ்சு கொள்ளணும் - நேரா கேட்டா ஏதாவது சந்தேகப் படுவாரு.

பலே. ஆமாம், ஏதோ நகெ கிகெ யாட்ட மிருக்குது-பளுவாதாயிருக்கணும்-கொஞ்சம் கஷ்டப்பட்டு தான் தூக்கிகினு போனாரு.

பக்.. அவருக்கு கஷ்டமென்ன ? ஆளெ நண்ணா கவனிச் சையா ?-வயசு அறுவத்து நாலானாலும் முண்டா கிண்டா எல்லாம் என்னமா திரும்பியிருக்கிறது பார்த் தாயா ? சமயம் வந்தா நம்மொப் போலே நாலு பெயரை அடிச்சி போடுவாரு போலே யிருக்குது !

பலே. அது என்னமோ வாஸ்தவம் தான். அவருக்குத் தெரியாதெதான் அந்த அறைக்குள் கன்னம் வைக்கணும் -அந்த அறையிலே தான் இப்பொ கொண்டாந்த பெட்டியையும் கொண்டு போனபோலே யிருக்குது.