பக்கம்:எழுத்து உலகின் நட்சத்திரம்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

( வல்லிக்கண்ணன் 117 வசதிகள் தரவே நினைப்போம். இதையும் தமிழ்ப் பெருமக்கள் கவனத்தில் கொள்ள வேண்டுகிறேன். என்னோடு தோழமை பூண்டு இந்த முயற்சியில் என்னுடன் வரும் இல்ட்சிய எழுத்தாள நண்பர்களுக்கு நான் நன்றி கூறி முடித்து விடப் போவதில்லை. அந்த உயர்தரமான நட்பை உடனே நன்றி கூறி முடித்துவிடவும் நான் தயாராயில்லை. அவர்களுடைய தோழமையை நான் தொடர்ந்து வழிபட விரும்புகிறேன். வழிபட விரும்புகிற தோழ மைக்கு நன்றி கூறிக் கணக்குத் தீர்த்து விடுவது நியாயமில்லை என்பது என் கருத்து. தீபம் தமிழ் எழுத்தாளர்களின் சுதந்திரமான சிந்தனைக்கும் முற்போக்கு நினைவுகளுக்கும் வசதியான ஒரு மேடையாக அமையும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. எழுத்துலகச் சிற்பிகள் சேர்ந்து படைக்கும் இந்த இலக்கிய ஏட்டைப் பலப்படுத்துவதற்கு தமிழிலக்கிய உணர்வுள்ள ஒவ்வொருவரும் நேரே சந்தாதாரராகி ஆதரிக்க வேண்டும். இதைவிட இன்னும் நான் இங்கு என்ன சொல்வது? எப்படிச் சொல்வது? உங்கள் உணர்வுகளுக்கும் என் உணர்வுகளுக்கும் நடுவில் வெறும் வார்த்தைகள் வந்துநின்றுதானாபேசவேண்டும்? மீண்டும் பார்க்கலாம்.