பக்கம்:எழுத்து உலகின் நட்சத்திரம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுத்து உலகின் நட்சத்திரம் "தீபம்' நா. பார்த்தசாரதி ) இரண்டும்தான், எல்லாம்த்ான் என்று சிரித்தார். எங்களது இருபத்தைந்தாவது வயதில் இவ்வண்ணம் தொடங்கிய நட்பு இறுதிவரை அவ்வாறே நீடித்தது. அவர் இருந்திருந்தால், தமிழர் கள் அலைகிறார்களே; அந்த ஞானபீட பரிசை எப்போதோ வாங்கித் தந்து இருப்பார். சாகித்திய அகாடமியின் தலைவராகி இருப்பார். பல அற்புதமான படைப்புக்கள் கிடைத்திருக்கும். நூறு வயது வரை அவர் இருந்து இருந்தாலும் ஒருபோதும் சோர்ந்து போய் இருக்க மாட்டார். - அவரது நினைவில் தோய்ந்து அவரது படைப்புகளில் ஆறுதல் காணுகிற நண்பர்களோடு என் உணர்வுகளை இக்கட்டுரை மூலம் பகிர்ந்து கொள்கிறேன்.