இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
GED—{ எழுத்து உலகின் நட்சத்திரம் "தீபம்' நா. பார்த்தசாரதி) அவர்தந்ததலைப்பு செல்லும் வழி இருட்டு. மலேயாசென்று பல சிறப்புச்சொற்பொழிவுகளைநிகழ்த்திய நா.பா.சென்னை திரும்பியதும், உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடல்நலம் தேறியது. வீடு திரும்பி ஒரு வாரம் முழுமையடைவதற்குள் காலமாகி விட்டார். செல்லும் வழி இருட்டு - என்றுதலைப்பிலான இன்னொரு குறிஞ்சிமலர் அல்லது இன்னொரு பொன்விலங்கு தமிழ்கூறும் நல்லுலகிற்கு கிடைக்காமல் போய்விட்டது. எனினும் என்ன? இலக்கிய உலகில் நல்ல நூல்களைத் தேடித் தேடிப் படிக்கும் வாசகர்கள் எல்லோரது உள்ளங்களிலும் அணையாத தீபமாக அவரது நினைவுகளும் அவரது படைப்புகளும் நின்று நிலைத்து ஒளி வீசியபடியேதானே இருக்கிறது? -