பக்கம்:ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதைகள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

த. கோவேந்தன்


சாந்தா, இதை நம்பவில்லை. நீ சொல்வது பொய் என்று சேவாவிட்ம் கூறினாள்.

“நீ என்னுடன் வா! நான் சொல்வது உண்மை என்று நிரூபிக்கின்றேன்” என்றாள் சேவா.

சேவாவுடன் சென்ற சாந்தா, அவள் கூறியது உண்மை என்பதைக் கண்ணாரக் கண்டு வியப்புற்றாள்.

உடனே வேகமாக ஓடி வந்து, தன் தந்தை துரோனரிடம், தான் கண்ட அதிசயத்தைக் கூறினாள்.

துரோணர், மகளின் கூற்றை நம்பவில்லை. சாந்தாவுக்கு மூளை குழம்பிவிட்டதால், இப்படி உளறுகின்றாள். தாழ்குலத்தான் படைக்கும் நைவேத்யத்தை இறைவன் ஏற்பானா? என்று கருதி, அவளை வீட்டில் அடைத்து வைத்தார்.

“கீழ்க்குலத்தானாகிய சேதா இறைவனை வழிபடுவதாக நடித்து இப்படிப் பொய்க் கதைகளைக் கட்டி விடுகின்றான். அவனை இப்படியே விட்டு வைத்தால், சாதி மரியாதையைக் குலைத்துவிடுவான். தாழ்குலத்தானுக்கு இறை வழிபாடு செய்ய உரிமை ஏது? உடனே அவனுக்குத் தக்கபுத்தி புகட்ட வேண்டும்” என்று முடிவு செய்தார் துரோணர்.

கீழ்க்குலத்தான் என்பதற்காக ஏகலைவன் வலதுகைப் பெருவிரலை வெட்டச் செய்தவர் அல்லவா துரோணர்!

உடனே சேதாவை அழைத்து வரச் செய்தார். “நாளைக் காலையில், ஆயிரம் சோடி செருப்புக்கள் அவசியம் தருதல் வேண்டும். இல்லையேல், மரண தண்டனை தரச்செய்வேன்” என்று கடுமையான உத்தரவிட்டார்.

என்ன செய்வார் சேதா! “ஒரு நாளில் ஒரு சோடி செருப்புத் தான் தைக்க இயலும் ஆயிரம் சோடி தைப்பது எப்படி? அதற்கு வேண்டிய மூலப் பொருளுக்கு எங்கே பேர்வது? சரி நம் தலை தப்பாது” என்று அழுது கொண்டே வீடு வந்து சேர்ந்தார். வந்த