பக்கம்:ஐந்திணை வளம்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 ஐந்திணை வளம் பெண்மையின் பெரிய சிறப்பு. தனக்கொரு மகன் பிறக்க வேண்டும் என்று விரும்பாதவர் யார்? இந்தச் செறிவான மனப்போக்கையும் செய்யுளிற் காண்கின்றோம். இவ்வாறாக, இரங்கலும் இரங்கல் நிமித்தமுமாக இயல்கின்றன மூவாதியரின் செய்யுட்கள். இவற்றுள், இப்பகுதியின் 1314 ஆவது செய்யுட் கிடையாது போயின வென்பதை முன்னரே கூறியுள்ளோம். தமிழகத்தின் வளமான இன்ப வாழ்க்கையானது, எவ்வாறு ஐந்திணை ஒழுக்கத்து அமைதியையொட்டிநிகழ்ந்து வந்தது என்பதனை ஒருவாறு விளக்குமுகத்தான், மூவாதியரின் ஐந்திணை எழுபதை ஒட்டிப்பயின்றுவரும்தலைவன் தலைவியர் தோழியர் ஆகியோரின் உள்ளவுணர்வுகளைக் கண்டோம். இவை பலவும், அமைதியைக் கண்டறிவதற்கு உதவுகின்ற சிறந்த சான்றுகள். ஆகவே,தமிழ் இலக்கியச்செழுமையை விருப்போடு அறிந்துபோற்றுதற்குத்தமிழன்பர்கள் முன்வரவேண்டும்; முன் வருவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. o 9 9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐந்திணை_வளம்.pdf/128&oldid=761810" இலிருந்து மீள்விக்கப்பட்டது