பக்கம்:ஒளிவளர் விளக்கு.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 ஒளிவளர் விளக்கு

என்பதை அற்புதமாக விளக்கியிருக்கிருர். அவர் கூறு வனவற்றில் இங்கே பொருத்திக் கொள்வதற்குரிய கருத் துக்கள் பல உண்டு.

இறைவன் திருவருளாலே எல்லேயற்ற பக்தியைப் பெற்ற சேந்தனர் தாம் பெற்ற இன்ப நிறைவினல் செருக்கு அடையவில்லே. முற்றுணர்வும் பேராற்றலும் யாவற்றையும் காக்கும் கருணேயும் அவனுக்கு உண்டு என்ற எண்ணம் உண்டாவதற்கு முன்பு, தம் கண் முன்னே தோற்றிய பேரழகுத் திருக்கோலத்தைக் கண்டு, காலத்துக்கு அப்பாற்பட்ட இடத்திலே வாழும் பொருள், காலத்தின் ஆட்சிக்குட்பட்ட இடத்துக்கு வந்து ஊனக் கண்ணுக்குப் புலப்படும் பொருளாகிறதே கம்பாற் கொண்ட பித்துத்தான் என்னே !! இப்பொருளுக்கு என்ன தீங்கு வருமோ!' என்ற ஐயம் உண்டாயிற்று. உண் டாகவே,"இந்தப் பேரழகுக்கும் பித்துக்கும் திங்கு வராமல் இவை கிலேத்து சிற்க வேண்டும்” என்று திருப்பல்லாண்டு பாடத் தொடங்கினர்.

குறைவிலாத நிறைவாகிய இறைவனேக் கண்டால் தமக்கு உரிய மங்கலத்தை அவனைக் கேட்டு இரக்கவேண் டியதல்லவா முறை? தாம் அவனுக்கு மங்கலம் உண்டாக வாழ்த்துவது பொருந்துமா' என்ருல், தம்முடைய கண் ஆணுக்குத் தோற்றிய அழகுத் திருக்கோலத்திலும் கருத்துக் குப் புலப்பட்ட பித்திலும் ஈடுபட்டுப் பக்தி பரவசராய் ஆழ்ந்து அவனுடைய ஆற்றலையும் காக்கும் திறமையையும் நிறைவையும் மறந்தமையால், அவனுக்கு கிறைவு வேண்டு வதையே தம் கிறைவாகக் கொண்டு மங்களா சாசனம் பண்ணினர்; ஆதலின் இது பொருந்தும். -

பல காலம் தவம் புரிந்து பேரழகுடைய தலைப் பிள்ளையை ஒருத்தி பெறுகிருள். அவனிடத்தில் யாருக்