பக்கம்:கஞ்சியிலும் இன்பம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 கஞ்சியிலும் இன்பம்

மருமகன் மாமியாருக்கு வேண்டிய சமாதானங்களைச் சொல்லி மனேவியைஅழைத்துக்கொண்டு போய்விடுகிருன், அங்கே மணப்பெண்ணின் அகங்காரமும், மிடுக்கும் தவிடு பொடியாகின்றன. மாமியார் கையில் அகப்பட்டு நெஞ்சம் குலேகிருள் அவள். -

பொறுக்க முடியவில்லே அங்குள்ள தொல்லேகள். பெண் தன் காதலன்பால் முறையிடுகிருள். - - - " காளைக்கே என் பிறந்த வீட்டுக்குச் சொல்வி அனுப்புங்கள். அவர்கள் ரதம் அனுப்புவார்கள். நாம் இருவரும் ஏறிக்கொண்டு போய்விடலாம். இந்தச் சிறை வாசத்திலிருந்து விடுதலே பெறலாம். என் பின்னலே பேசாமல் வந்திடுங்கள். அங்கே என்ன குறை ? எங்கள் விட்டில் பாலாறு தேருைக ஒடுகிறது. மங்தை கிறைய மாடுகள் இருக்கின்றன. உங்களேக் கவனித்துக்கொள்ள மந்திரியைப்போல கான் இருக்கிறேன். என்னுடைய அழகு உங்களுக்கு இன்பம் தரும். இயற்கை அழகோடு செயற்கையழகுக்கும் குறைவில்லை. கொண்டை கிறையப் பூச் சூட்டிக்கொண்டு உங்கள் கண்ணேக் குளிர்விப்பேன். நீங்கள் ராஜாவைப்போல ஆனந்தமாக இருக்கலாம் என்று சொல்கிருள்.

சின்னச் சின்னச் செடிகுலுங்க,

சித்ரமணி ரதங்குலுங்க வன்னி மரம்குலுங்க . .

வந்திடுங்க என்பிறகே ! மந்தையிலே மாடிருக்க w . - மந்திரிப்பெண் நானிருக்கக்

கொண்டையிலே பூவிருக்க, . குற்றமென்னராஜாவே ? . . . பணக்கார வீட்டில் பிறந்தோம் என்ற பெருமிதத் திலே வருகிறது பேச்சு. வந்திடுங்க என் பிறகே ! என்ற வார்த்தை அதிகாரத் தொனியோடு ராணி ஒருத்தி பேசுவதைப்போலத் தோற்றவில்லையா ? . . . . . . .