பக்கம்:கடவுள் கைவிடமாட்டார்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

96

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


உழைத்து சம்பாதித்த பொருட்கள் தான் ஒருவருக்கு ஒட்டும். ஏமாற்றி சேர்க்கும் பொருட்கள் ஆரம்பத்தில் இன்பம் தருவது போலத் தோன்றினாலும், தொடர்ந்து துன்பத்தையே தரும் என்பது தான். உலகத்தில் நாம் அன்றாடம் காண்கின்ற காட்சியாக இருக்கிறது.

மனதிருப்தியும் மகிழ்ச்சியும், பொன்னாலும் பொருளாலும் மட்டும் வருவதில்லை. உண்மையான உழைப்பில், நன்மை செய்வதில், பிறரை மதிப்பதில், ஆபத்தில் உதவுவதில், அன்புகாட்டுவதில் தான் வருகிறது.

நாமும் இதை நினைப்போம். உண்மையுடன் உழைப்போம். உயர்ந்த வாழ்வு வாழ வேண்டும் என்ற நல்ல லட்சியத்துடன் உழைப்போம். நல்ல பாதையில் நடப்போம். இந்த லட்சியத்தை நெஞ்சிலே உறுதியாகக் கொண்டவர்களைக் கடவுள் என்றும் கைவிடவே மாட்டார்!