பக்கம்:கடவுள் பாட்டு.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56


கொதித்தங் கவரை யழித்திடவோ
குடிகெட் டிடவோ செய்யாய்நீ
புதுத்தேன் வெள்ளம் போற்கருணை
பொழிவாய் அவரும் வாழ்வாரே!
171
பொய்மை வழியில் மனமென்னும்
பொல்லாக் குரங்கைச் செலவிட்டால்
செய்ய லாகாச் செயலெல்லாம்
செய்து துயரை மிகுவிக்கும்
ஐயா உன்றன் காலடியில்
அடிமை யானால் அதுபோதும்
மெய்யாய் என்றன் குடியோடு
மேன்மை யடையச் செய்திடுவாய்.
172
சுவையோ டன்னை வீட்டகத்தே
சுட்ட உணவை விரும்பாமல்
எவையோ தெருவில் விற்பதெலாம்
இனிதென் றேங்கும் குழந்தையெனக்
குவைபோல் நிறைந்த உனதருளைக்
குறியாய்க் கொள்ளா தெங்கெங்கோ
எவையோ தேடித் திரிவாரின்
இயல்பை என்னென் றுரைப்பேனே.
173
ஐயா உன்னைத் தொழுதிடலும்
அருளைப் பெற்றுப் பிழைத்திடலும்
மெய்யாய் அறிவேன் அல்லாமல்
வேறொன் றறியேன் மற்றிங்கே
பொய்யாய்ச் சிலரோ அற்புதங்கள்
புரிவோம் என்று புறப்பட்டார்
தெய்வம் நீயல் லாதொருவர்
செய்யும் ஆற்றல் உடையவரோ?
174

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடவுள்_பாட்டு.pdf/58&oldid=1211773" இலிருந்து மீள்விக்கப்பட்டது