பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 தரிசித்து இன்புற நான்முகன் எனக்கு நாலாயிரம் கண்களைப் படைக்கவில்லையே! என்கிறார் அருணகிரிநாதர். முருகனுடைய பேரெழில் கண்ணினால் அளவிட்டு முடிப்பதற்கு உரியதன்று என்ற கருத்தையே அந்த முறையில் சொல்கிறார். இந்தப் பாட்டில் திருச்செங்கோட்டின் பெருமை வருகிறது. மூன்றாவது பாடலிலும் தொடர்ந்து திருச்செங்கோட்டில் எழுந்தருளியிருக்கும் வேலவனை நினைக்கிறார். முன்பாட்டில் அவனைத் தரிசித்ததனால் உண்டான இன்ப உணர்வு பொங்கு கிறது. இந்தப் பாட்டில் அவனைத் தியானிப்பதனால் வரும் நலத்தைச் சொல்கிறார். “கன்னிப் பூகமுடன் தருமா மருவு செங் கோடனை வாழ்த்துகை சால நன்றே" என்கிறார். இந்தப் பாட்டில் சாதிப் பெயர்கள் பல, தொனியில் அமைந்துள்ளன. நான்காவது பாடல் முருகனுடைய திருவடிப் பெருமையைக் கூறுவது. இறைவனுடைய அடியார்களின் பக்குவத்துக்கு ஏற்ப அத்திருவடி நிற்பதை அருணகிரிநாதர் இதில் குறிப்பாகப் புலப்படுத்தியிருக்கிறார். உருவ வழிபாடு செய்வாருக்கும் தியானத்தில் ஈடுபடுவாருக்கும் மெல்ல மெல்ல அநுபவத்தில் தலைப்படுவாருக்கும் முடிந்த முடிபாகிய வீட்டின்பத்தை அடைவாருக்கும் தக்க வகையில் அந்தத் தண்டையம் புண்டரிகம் விளங்குவதை இந்தப் பாடல் தெளிவிக்கிறது. தொண்டர் கண்டு இன்புறும் புண்டரிகம் அது; தொண்டர் கண்டு அண்டி இன்புறும் தண்டையம் புண்டரிகம் அது; தொண்டர் கண்டு அண்டி மொண்டு இன்புறும் ஞானம் என்னும் தண்டையம் புண்டரிகம்; தொண்டர் கண்டு அண்டி மொண்டு உண்டிருக்கும் சுத்தஞானம் என்னும் தண்டையம் புண்டரிகம். இவ்வாறு கூட்டிப் பொருள் கொள்ளும்படி அடைகளை அமைத்துப் பாடியிருக்கிறார். அருண கிரிநாதர் சந்தப்பாக்கள் பாடுவதில் மிக வல்லவர். இந்தப் பாட்டில் சந்த நயமும் வழியெதுகை யின்பமும் இணைந்து இன்னோசை ததும்ப நிற்கின்றன. தொண்டர்கண் டண்டிமொண் டுண்டிருக் குஞ்சுத்த ஞானமெனும் தண்டையம் புண்டரி கந்தரு வாய்தண்ட சண்டவெஞ்சூர் 126