பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 மேலும் ஆசை எழுமேயன்றி அடங்காது. யாருக்கு மன நிறைவு உண்டாகிறதோ அவன்தான் இறைவனைக் காண முடியும். அப்படிச் சொல்வதைக் காட்டிலும் இறைவனுடைய திருவருளுத் காக ஆசைப்படுகிறவனுக்கு அந்த அருளிலேதான் நிறைவு உண் டாகும் என்று சொல்ல வேண்டும். இறைவனிடத்தில் ஆசைப் படுகிற காமம் சிவகாமம். அது பக்தி முறுகிய நிலை. மற்றப் பொருள்களிடத்தில் உள்ள காமம் அவகாமம். பருவத்துக்குரிய உணர்ச்சியால் மகளிரிடத்தில் மயல் கொண்டு தீய நெறியில் உள்ளம் செல்லுகிறது. தன்னுடைய மனையாளோடு வாழ்வது அறத்தின்பாற்படும். அப்படியின்றி மற்ற மகளிரைக் கண்டோ, பொது மகளிரிடத்தில் ஈடுபட்டோ உள்ளத்தைச் செல்லவிடுவது பொல்லாத காமமாகும். தன்னுடைய மனையாட்டியிடத்தில் காதல் செய்வதை அன்புள்ள காமம் என்றும் அல்லாதவற்றைத் தீய காமம் என்றும் சொல்வார்கள். மனையாட்டியிடத்தில் பெறுகின்ற இன்பமும் அறத்தோடு பொருந்தியது. பிறவிதோறும் தொடர்ந்து வருகின்றவர்கள் கணவன் மனைவி என்ற கொள்கையை உடையது இந்த நாடு. மனையாட்டியோடு வாழ்வது அறம் செய்வதற்காக. அந்த அறத்தில் மனம் ஈடுபடும் பொருட்டு அறத்தோடு இன்பத்தையும் துணையாக அமைத்திருக்கிறான் ஆண்டவன். அந்த இன்பம், அறத்தோடு பொருந்தி இருந்தால்தான் உறுதிப்பொருளில் ஒன்றாக இருக்கும். அவ்வாறின்றி வெறும் இன்பத்திற்காக மாத்திரம் ஆசைப்பட்டால் அதனால் விளைகிறது துன்பந்தான். அது அறத் தோடு சாராது; உறுதிப்பொருள் ஆகாது. புறக்காட்சி புறக்கண்ணினாலே புறப்பொருளைக் கண்டு ஆசைப்படும் இயல்பு எப்பொழுதும் தவறானது. அதனால் விளைவது வெறும் காமம். மனைவியும் கணவனும் உள்ளத்துள் அன்பு மிக்குப் பழகுவதனால் நாளடைவில் புற அழகு மறைந்தாலும் அக அழகு குறைவது இல்லை. புறக் கண்ணினால் கண்டு அடைகிற மோகம் பலகாலம் நில்லாது. முதலில் மோகம் உண்டானால் பிறகு அறத்தோடு பொருந்தும் இன்பம் உண்டாவது எளிதன்று. மனத்தில் தோன்றிய அன்பற்ற பற்று, மோகத்திற்குக் காரணமான 220