பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/433

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 நிற்கிறோம். அதற்கு இருதலைக் கொள்ளியின் உள்ளே உள்ள எறும்பை உவமிக்கிறார். 'எம்பெருமானே, இருதலைக் கொள்ளி யின் உள்ளே இருக்கும் எறும்பு போல, உன்னைப் பிரிந்து எந்தப் பக்கமும் செல்ல முடியாதபடி நான் துன்புறுகின்றேன். என்னை இப்படி விட்டுவிட்டிருக்கலாமா?' என்று அலறுகிறார். 'இருதலைக் கொள்ளியின் உள்ளெறும் பொத்து நினைப்பிரிந்த விரிதலை யேனை விடுதிகண்டாய்; வியன் மூவுலகுக்கு ஒருதலை வா,மன்னும் உத்தர கோசமங் கைக்குஅரசே, பொருதுஅலை மூவிலை வேல்வலன் ஏந்திப் பொலிபவனே." அருணகிரியார் பாடல் இவற்றை எல்லாம் இப்போது மனத்தில் பதித்துக் கொண் டால் அருணகிரி நாதப் பெருமான் சொல்கிற ஒரு பாட்டுக்கு விளக்கம் பெற உதவியாக இருக்கும். அவரும் இருதலைக் கொள்ளி எறும்பைச் சொல்கிறார். ஆனால் அந்த இரு தலையும் இன்னவை என்று சுட்டிக் காட்டவில்லை. இருதலைக் கொள்ளி யின் நடுவிலுள்ள எறும்பு போல நான் குலைந்து கொண்டிருக் கிறேன்; அதனால் எனக்கு உண்டானதுயரம் வளர்ந்து வருகிறது. அதனை ஒழிக்க வேண்டும் என்று முருகனிடத்தில் பிரார்த்திக் கிறார். கொள்ளித் தலையில் எறும்பது போலக் குலையும் என்றன் உள்ளத் துயரை ஒழித்து அருள்வாய், ஒருகோடி முத்தம் தெள்ளிக் கொழிக்கும் கடல் செந்தில் மேவிய சேவகனே! இந்த உவமையைச் சற்றே விரித்துப் பார்க்க வேண்டும். இரண்டு பக்கமும் கொள்ளி உள்ள ஓரிடத்தில் எறும்பு நிற்பது போல நான் நிற்கிறேன் என்று சொல்கிறார். அந்த இரண்டு தலைகள் எவை? பலவற்றைச் சொல்லலாம். இரு தலை இறப்பு பிறப்பு என்ற இரண்டும் நம்முடைய வாழ்க்கை யின் இரண்டு தலைப்பிலும் உள்ளவை. கொள்ளியின் ஒரு தலைப் பாகிய பிறப்புத் துன்பத்திலிருந்து வெளிப்பட்டு வந்திருக்கி றோம். மறுபக்கத்தில் இறப்பு என்னும் துன்பம் இருக்கிறது 424