பக்கம்:கனவுப்பாலம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 கனவுப் பாலம் வந்தவர்கள் இருவிரும் வண்டியில்ல் ஏறிச் செல்ல, அயாகோ புதிதாக இறக்கப்பட்ட சாமான்களை ஒழுங்கு படுத்திக் கொண்டிருந்தபோது டெலிபோன் மணி அடிக்கவே, ‘அம்மாவா யிருக்குமோ? என்று யோசித்த படியே ரிளிவரை எடுத்துக் காதில் வைத்தபோது அது அம்மாவின் குரலாயில்லாமல் அம்மாவைப் பற்றிய குரலா யிருந்தது. - - போலீஸ் இன்ஸ்பெக்டர் பேசுகிறேன். அதிர்ச்சியான செய்தி ஒன்றைத் தாங்கிக்கொள்ளத் தயாராயிருங்கள். ஸ்கூரா இயக்கத் தலைவி கிஜிமாஸான் இன்று விடியற்கால இங்கே இறந்து விட்டார். ஒட்டல் ஐந்தாவது மாடியிலிருந்து கீழே விழுந்து உயிர் போயிருக்கிறது. கொலேயா, தற்கொலேயா என்று தெரியவில்லை. அவருடன் வந்த கோபால் என்பவரைக் காணவில்லை. அவர் அறை திறந்து கிடக்கிறது. கிஜிமாஸான் அறைக் கதவும் திறந்து கிடக்கிறது. தாங்கள் கிஜிமாஸ்ானுக்கு என்ன உறவு என்று கூற முடியுமா? அயாகோ, அதிர்ச்சி தாங்காமல் குலுங்கி அழுவதும் அலறுவதும் இன்ஸ்பெக்டருக்குக் கேட்கிறது. சிறிது நேரம் காத்திருந்து விட்டு நீங்கள் அழக்கூடாது. துக்கத்தை அடக்கிக் கொண்டு சற்று அமைதியாக என் கேள்விக்குப் பதில் சொல்லுங்கள். தாங்கள் யார்?’ என்கிருர். கிஜிமாவின் மக்ள்.: பெயர்? அையாகோ. உங்கள் தாயாரின் அகால மரணம் எங்களுக்கும் இந்தத் தீவிலுள்ளோருக்கும் பெரும் அதிர்ச்சியைத் தந்துள்ளது. வெரி ஸாரி அயாகோ இன்னும் சில மணி நேரத்துக்குள் உங்கள் தாயின் உடல், போஸ்ட்மார்ட்டம் முடிந்ததும், உங்களிடம் கொண்டு வந்து சேர்த்து. விடுவோம்.’’ -” ; ,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனவுப்பாலம்.pdf/22&oldid=768614" இலிருந்து மீள்விக்கப்பட்டது