பக்கம்:கனவுப்பாலம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

_சாவி 83 அப்போதுதான் அந்தக் கர்ச்சிப் அவள் கையில், சிக்கியது. தற்கொலை செய்து கொள்ளப் போகிற எந்திப் பெண்ணும் கையில் கர்ச்சிப் வைத்துக் கொண்டிருக்க மாட்டாள். கிஜி மா தானகவே கீழே விழுந்து சாகவில்லை. அவளேக் கீழே தள்ளிக் கொன்றவள் நான்தான். * அடுத்தகணமே நான் அந்த அறையை விட்டு வெளி யேறிக் கதவைச் சாத்தி விட்டேன். எனக்குப் பணம் கொடுத்துக் கொலே செய்யத் தூண்டிய அந்தப் பணக்காரர் எனக்கு உதவியாக நாலு பேரை அனுப்பியிருந்தார். அவர் கள் வெளியே காத் திருந்தார்கள். திட்டமிட்டபடி நான் வைத்திருந்த இன்ைெரு கைக்குட்டையை அவர்களிடம் கொடுத்து விட்டு என்னுடைய ஸ்டோர் அறைக்கு ஓடி விட்டேன். கி ஜிமா தற்கொலே செய்து கொண்ட்தாகவே பலர் நம்பி விட்டார்கள். யாரும் என் மீது சந்தேகப்பட வில்லை. அன்று என் உதவிக்கு வந்திருந்த அந்த முரடர்கள் நாலு பேருடைய விலாசமும் இத்துடன் இணேத்திருக் கிறேன். - கிஜிமாவைக் கொலை செய்வதற்காக எனக்குப் பணம் தந்தவர் ஒரு பெரிய தொழிலதிபர். அமெரிக்க எண்ணெய்க் கம்பெனி ஒன்றுடன் கூட்டுச் சேர்ந்திருப்பவர். ஸ் குரா இயக்கத் தலைவியைத் தீர்த்துக் கட்டி, ஒகி ஐலாண்டில் 'எண்ணெய் எடுக்கும் முயற்சியில் அமெரிக்கக் கம்பெனிக்கு உதவி செய்ய வேண்டும் என்பதில் தீவிரமாக இருப்பவர். அதற்காகவே எனக்குப் பணம் கொடுத்து இந்தக் கெர்லேயைச் செய்யத் துாண்டியவர். பெரும் பணம்தந்தார். என் வாழ்நாளில் நான் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத தொகை அவர் விலாசமும் இத்துடன் வைத்திருக்கிறேன். பணத்துக்கு ஆசைப்பட்டு முன்யோசன. இல்லாமல் கித் மாவைக் கொன்று விட்டேன். பெண்புத்தி பின் புத்தி என்பது அப்புறம்தான் எனக்கு உதித்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனவுப்பாலம்.pdf/79&oldid=768676" இலிருந்து மீள்விக்கப்பட்டது