பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

vi தேர்தல்களில் பங்கு 1950 ஆம் ஆண்டுகளின் கடைசியில் திரு. அ.சீனிவாசன் இராஜபாளையம் நகரசபைத் தேர்தலில் வார்டு உறுப்பினர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று நகர சபை உறுப்பினராகச் சிறப்பாக பணியாற்றியுள்ளார். 1984 ஆம் ஆண்டிலும் 1991 ஆம் ஆண்டிலும் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் சிவகாசி பாராளுமன்றத் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக திரு. அ.சீனிவாசன் போட்டியிட்டு ஒவ்வொரு தடவையிலும் இரண்டு லட்சத்திற்கும் தேற்பட்ட வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தைப் பெற்று குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தவர். இரு தடவை களி லும் முறையே இந்திரா காந்தி படுகொலை, ராஜீவ் காந்தி படுகொலை அதனால் ஏற்பட்ட அனுதாப அலை அவருக்கு பாதகமாக இருந்தது. திரு. அ.சீனிவாசன் சிறந்த சிந்தனையாளர், எழுத்தாளர், பத்திரிகையாளர், நூலாசிரியர், சிறந்த பேச்சாளர், இராணுவ சேவை அனுபவம் பெற்றவர். தொழிற் சங்கத் தலைவராகப் பணியாற்றி அனுபவம் பெற்றவர். பல நாடுகளுக்கும் இந்திய நாட்டில் பல மாநிலங்களுக்கும் சென்று சுற்றுப் பயணம் செய்து அனுபவம் பெற்றவர். தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகள் அறிந்தவர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டிருந்த காலத்தில் 1948 - 50 ஆம் ஆண்டு காலத்தில் கடுமையான போலீஸ் அடக்கு முறைக்கும் சித்திரவதைக்கும் கொடுமையான சிறைவாசத்திற்கும் உட்பட்டு மதுரை, சேலம் சிறைகளில் கடும் தண்டனை அனுபவத்து தியாகத் தழும்புகள் ஏறியவர். இலக்கிய அனுபவம் திரு. அ. சீனிவாசன் ஏற்கனவே தனது குழந்தைப் பிராயத்திலிருந்தே தனது தாய் தந்தையர் மூலம் இராமாயணம்,