பக்கம்:கலீலியோவின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

33

கலீலியோவின்


கலீலியோ இவ்வாறு அம்புலியை ஆராய்ந்து கண்ட வெற்றிக் களிப்பின் இடையே, அதைச்சுற்றியுள்ள மற்ற கோள்களையும் ஆராய்ச்சி செய்தார்.

அவரது வானியல் தேடலில், மற்ற கோள்களது உருவங்கள் எல்லாம் நிலாவின் உருவத்திலே கால் பங்கு உருவமாக அவரது கண்களுக்குத் தெரிவதைக் கண்டார்.

பால் வெளித்தோற்றம் என்ற வான் பரப்புகளை அவர் ஆராய்ந்தபோது, அங்கே என்ணற்ற நட்சத்திரங்கள் இருப்பதையும், அவற்றை ஒவ்வொன்றாகவும் பெரிய பெரிய உருவத்தோடும் பார்த்தார்.

10. வியாழனில் நான்கு சந்திரன்களைக் கண்டார்!

கலீலியோ தனது ஆராய்ச்சியை, 1610-ஆம் ஆண்டு வாக்கில் வியாழன் என்று கூறப்பட்ட Jupiter கிரகத்தின் மேல் செலுத்தினார்.

வியாழன் கிரக ஆராய்ச்சியின் போது, ஒரே நேர்க்கோட்டில் மூன்று சிறு சிறு நட்சத்திரங்கள் இருப்பதை ஆழ்ந்து நோக்கினார்.

அந்த நட்சத்திரங்களில், இரண்டு வியாழன் கோள் கிழக்குப் பக்கத்திலும், மற்றொன்று மேற்குப் பக்கத்திலும் இருப்பதைக் கண்டு, அவற்றிற்கு இடையே உள்ள தூரங்கனையும் பார்த்து அதன் செயல்களைக் கவனித்தார்.

அதே சிறு நட்சத்திரங்களை மீண்டும் மீண்டும் அவர் பார்த்த போது, அவை முன்பு இருந்த இடத்தை விட்டு வேறு ஒரு இடத்திற்கு நகர்ந்துள்ளதைக் கவனத்துடன் ஆராய்ந்தார்.

அவற்றை மேலும் மேலும் நோக்கி அவர், ஊடுருவிய போது, வியாழன் அருகே உள்ள நட்சத்திரங்கள் மூன்றல்ல நான்கு என்று உணர்ந்தார்.