பக்கம்:கள்வர் தலைவன்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-4) கள்வர் தலைவன் 荔岛 செள. ஐஐயோ! ராஜகுமாரா ராஜகுமாரா: அவனுக்கொன் றும் தெரியாதே அவன் அறியாப்பாலகயிைற்றே அவ லுடைய கண்களை யா பெயர்க்கப்போகின்றீர் ! அதைக் கண்டு நான் எவ்வாறு உயிர்வாழ்வேன்! அதை விட என்னுடைய கண்களேப் பெயர்த்துவிடுமே. ராஜகுமாரா ராஜகுமாரா ! உமக்கு ஈவு இரக்கமில்லேயா! சற்ருயினும் மனமிரங்கலாகாதா! என் பாலனது கண்களைப் பிடுங்கும் படிக் கட்டளையிட உமது மனம் கல்லோ ! உம்முடைய தமயனுடைய குழந்தையென்று மனமிரங்கலாகாதா ! ஐயோ! இதற்கோபாபி கானவனைப்பெற்றேன். ஐயோ ! இந்த காட்டில் நியாயமணியாயமில்லையா : தெய்வத்திற் குத்தான் கண் அவிந்து போயிற்ரு ! செளரி, அடே செல்லுங்கள் உள்ளே (சேவகர்கள் சிறைச் சாலைக்குட் போகிருர்கள்.) சேவகர்கள். ராஜகுமாரா தாமாவருகின்றீரா காங்கள் இழுத் துக்கொண்டு போகவேண்டுமா ? பா. அப்பா, இதோ கானகவந்துவிட்டேன். இதோ என தன்னையிடம் விடைபெற்று வருகின்றேன்செள. ராஜகுமாரா யமகிங்கரர்கள்வந்து விட்டார்களே ! வந்து விட்டார்களே! இந்தவேளே எங்களைக்காப்பாற் றும் ! ஐஐயோ! என்பாவிக்கண்களைப் பறித்து விடுமே ! என்பர்ல்னைச் சும்மா விட்டு விடும். உமக்குக்கோடி புண்ணிய முண்டு. ஐயோ! இதைவிட என்னேயாவது கொன்றுவிடுமே முதலில் செளரி. அப்பா, கான் இவள் கூறுவதைக் கேட்டால் என் மனதைக் கரைத்து விடுவாள் (காதைமூடிக்கொள்கிருன்) பா. (தன் அன்னையிடம் சென்று) அம்மா 1-ஆம்மணி ! இனி விருந்தி என்னபயன் -வருத்தப்படாதீர் மனதைத் தைரியப்படுத்திக் கொள்ளுங்கள்!-எனக்கு விடையளி யும் நான் போய்வருகின்றேன்!-யாவும் ஈசன் செயல் ! செள (பால சூரியனைக் கட்டிக் கொண்டு) கண்ணே கண்ணே ! பாலசூரியா ! என்வயிறுசெய்த கொடுமையடா. இது ! என் அருஞ்செல்வமே ! இந்த விதியனுபவிப்பதற்கோ உன்னை இப்புவியிற் பெற்றெடுத்தேன் பெற்றெடுத் தேன் அடாமகனே என் பாவிவயிறு எரிகின்றதே ! பா. அம்மா, தம்முடைய வயிற்றிற்பிறக்கும் படியான பாக் கியம் நான் பண்ணினேன் அம்மணி, நேரமாகின்றது நான் தமக்கென்ன தேறுதல் சொல்லப்போகின்றேன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கள்வர்_தலைவன்.pdf/57&oldid=779763" இலிருந்து மீள்விக்கப்பட்டது