பக்கம்:கவிபாடிய காவலர்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

3. சேரமான் கோட்டம்பலத்துத்
துஞ்சிய மாக்கோதை

பிரிவு என்பது பெருந் துன்பம் தர வல்லது. இதனைப் "பேயோடாயினும் பிரி வரிதே" என்னும் பழமொழியினாலும் நன்கு அறியலாம். இவ்வாறான பிரிவு இரண்டு முறையில் அமையும். ஒன்று சின்னுளோ, சில திங்களோ, சில்லாண்டோ பிரிந்து இருந்து மீண்டும் வந்து கூடுவதாகும். மற் ருென்று, வாழ் நாள் உலந்து வாளுடுறுகின்ற பெரும் பிரிவாகும். இது மீண்டும் வந்து கூடும் பிரிவாகாது. இந்தப் பிரிவுக்கு எவரும் அஞ்சுவர். இல்லையானல் யானேதும் பிறப்பஞ்சேன் இறப்பதற்கு என் கடவேன் ' என்று வாதவூரர் கூற முன் வருவாரா ? ஆகவே, இறப்புப் பிரிவு மிக மிக இன்னதது. ஆதலின், மனம் ஒத்த காதலன் காதலி ஆகிய இருவருள் ஒருவர் பிரிந்து போனால் அவர்கள் உள்ளம் என்ன பாடுபடும்?

திருவள்ளுவர் எவ்வளவோ உள்ளத்தூன் படைத்தவர் ; எல்லோருக்கும் நீதி புகட்டியவர் ; இறப்பின் இயற்கை நிகழ்ச்சியைக் கூட எடுத்து இயம்பியவர் ; நெருநல் உளன் ஒருவன் இன்று இல்லை என்னும் பெருமை உடைத்து இவ்வுலகு " என்றும் "உறுங்குவது போலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும்